Pages

Thursday, May 19, 2011

என் காதலனே!!!!


ஏதாவதொரு தோரணையில்
திடீரென விஸ்வரூபமெடுத்து
நெஞ்சம் முழுமைக்கும்
வியாபித்து நிற்கிறாய்

உன்னைப்பற்றி
யோசிக்கவே கூடாதென்பதை மட்டுமே
நாள் முழுக்க யோசித்துக் கொண்டிருக்கின்றேன்

என் சுவாசத்தின்
அருஞ்சொற்ப்பொருள் நீ!!
எல்லா கோடிட்ட இடங்களிலும்
உன் பெயரை மட்டுமே நிரப்புகிறேன்....

நான் மாதவியாயும் இருக்கச்சம்மதம்...
நொடிப்பொழுதேயாகிலும்
என் பெயரை மட்டுமே
உச்சரித்து உன் இதயம்
துடிக்குமானால்.....

இமைகளை பிடிங்கிக்கொண்டு
இமைக்கச்சொல்வது மாதிரியானது
உன்னைப்பற்றியதான கனவுகளை
களைந்து விட்டு வாழ்வதென்பது...

எதேச்சையாகவேனும்
தோன்றலாம்
என்றாவதொருநாள்
உன் கனவில்........நான்!!

உன் பார்வைப்பட வேண்டி
என் கவிதைகளெல்லாம்
அகலிகையாய் காத்துக்கிடக்கின்றன
என் கவிதைகளுக்குமேனும்
சாப விமோசனம் தா!!

1 comments:

Mahan.Thamesh said...

arumayaai ullathu