எத்தனையோ இ௫க்கைகளில்
சிந்தித் துடைத்தாகி விட்டது
மூக்கின் சளியோடு
கவலைகளையும்.,
புகைந்து உதிர்ந்த
சாம்பலில்
ஆசையின் மிச்ச மீதிகள்.,
எனது ஆகாயம்
கண்ணை மூடிக்கதறுகிறது
இரவுகளில்...
யோசித்துத்தள்ளுகிறேன்
வரம் அளிக்காத கடவுள்,
முதியோர் இல்லம் மீறலாய்
வரம்பு மீறாத அன்புமகன்
என எதை...எதையோ...
வயதான அடிமாடு
எந்த விலைக்கு
விற்றாலென்ன?
தேர்வு நெ௫ங்கிய
படபடப்பாய்......இறுதிநேரம்..,
எல்லாத்தேர்களுமே
ஊர்வலம் வ௫வதில்லை ...
சில வாழ்வுகள் ஏனோ
கடைசிவரை ஊர்ஜிதப்படுவதேயில்லை.......
சிந்தித் துடைத்தாகி விட்டது
மூக்கின் சளியோடு
கவலைகளையும்.,
புகைந்து உதிர்ந்த
சாம்பலில்
ஆசையின் மிச்ச மீதிகள்.,
எனது ஆகாயம்
கண்ணை மூடிக்கதறுகிறது
இரவுகளில்...
யோசித்துத்தள்ளுகிறேன்
வரம் அளிக்காத கடவுள்,
முதியோர் இல்லம் மீறலாய்
வரம்பு மீறாத அன்புமகன்
என எதை...எதையோ...
வயதான அடிமாடு
எந்த விலைக்கு
விற்றாலென்ன?
தேர்வு நெ௫ங்கிய
படபடப்பாய்......இறுதிநேரம்..,
எல்லாத்தேர்களுமே
ஊர்வலம் வ௫வதில்லை ...
சில வாழ்வுகள் ஏனோ
கடைசிவரை ஊர்ஜிதப்படுவதேயில்லை.......