Pages

Wednesday, May 25, 2011

பிசாசு!!


விளக்ககணைத்துப்படுத்த
சொற்ப நொடிகளுக்குள்ளாகவே
சன்னல் திரைச்சீலைக்குப் பின்னாலிருந்தோ
அலமாரி டப்பாக்களுக்கு நடுவிலிருந்தோ வெளிப்பட்டு
அறை முழுக்க ஆக்கிரமித்து
சம்மணமிட்டமர்ந்திருக்கும்
இருளின் தோள்களில் கருப்பாய் வந்தமர்ந்தது
அவ்வுருவம்...

நாற்காலி நகர்த்துவதாகவும்
இங்கே வா.... என்று அழைப்பதாகவும்
அச்சுறுத்தத் தொடங்கியது அது..

விளக்கிடலாமா....
தைரியம் குறைவென்றாகிவிடுமோ
என்ற கூச்சத்தில் தாகமெடுத்தாலும்
சிறுநீர் கழிக்கத்தோன்றியும் எழத்தோணாது
இறுக்க மூடிக்கிடந்தன இமைகள்..

இருள் பிதுங்கிப்பிரசவித்த
அக்காலைப்பொழுதில்
விடுபட மாட்டாது கிடந்த
தூக்கத்தை சித்ரவதைக்கொலை செய்து விட்டு
லேசாய் விழித்துப்பார்த்தேன்...
வெளிச்சமாய் மாறிப்போயிருந்தது அவ்வுருவம்...

காரணம் கேட்க முயற்ப்படுமுன்,
காதருகே குசுகுசுதுப்போனது
இரவு வரைக்கும்
நீ தான் பிசாசென்று.....

0 comments: