Pages

Monday, September 12, 2011

மாற்றம்..



எப்போதும் போலவே
என்னை நீயாய் காட்டுகின்றது
இந்நிலைக்கண்ணாடி...
தன்னை வேறோன்றதாய் காட்டிக்கொள்வதில்
யாருக்குத்தான் அங்கலாய்ப்பில்லை..?

குறிசொல்லும் ஜோசியக்காரனின்
எந்த வார்த்தையும் செவிக்குள் ஏறவில்லை...
உன்னைக்குறித்து பேச்செடுக்கும்வரை...

நீ கிள்ளி வைத்துச்சென்ற
பேருந்து நிறுத்த மரத்தில்
மணிக்கணக்காய்
உன் நகத்தின் வாசம் முகர்கிறேன்...

உன் அழகால்
நான் மயங்கவில்லை
உன்மேலுள்ள என் மயக்கத்தால்
நீ கூடுதல் அழகாகிறாய்...

பல்லாங்குழிக்கற்க்களாய்
அடுக்கி வைக்கப்பட்ட என்
ஆசைகளின் முதலாவதாய்
மேலே நிற்கும் ஒன்று
தடுமாறி விழுந்து கடைசியாய் மாறிப்போனது
நீ எதுவும் பேசாமல் கடந்துச்சென்ற அவ்வினாடி...