Pages

Monday, May 9, 2011

வினை!!


இரத்தத்தை மொத்தமாய்
பிழிந்து திரி ஏற்றுகிறாய்
கப கபவென பற்றி எரிகிறது
காதல்.

துரத்திவரும் உன் பார்வைகளுக்கு
பயந்துபோய் உயிரின் மீதேறி
ஒடுங்கி உட்கார்ந்து கொள்கின்றது
ஆசை

சீனத்துக் கடற்க்கரைகளின் பெயர்
கேட்டது மாதிரி பேந்த விழிக்கின்றது
உன் விழித்திரையில்
என்னைப்பற்றியதான
ஏக்கங்கள்

ஐன்ஸ்டீன் தத்துவத்தில்
அடங்காத மனம்
உன் ஐ விரல் தத்துவத்தில்
அடங்கி வழிகின்றது

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்-
எப்போது அறுவடை செய்யப்போகிறாய்
காதலை?

0 comments: