Pages

Sunday, October 9, 2011

சில.....

உன்னை நோக்கிய
நெடுந்தூர ஓட்டத்தில்
காதறுந்த வலதுக்கால் செருப்பு
உன் கடைசி நொடிக்காத்திருப்பின்
பெருமூச்சுடன் விசும்பி அழுகின்றது...

கவிதை ஒன்றை எழுதி நீட்டினேன்
காதல் எனப் பெயரிட்டாய் அதற்க்கு....
என் காதலை மொத்தமாய் எழுதி நீட்டுகிறேன்....
கூச்சமே இல்லாமல் கவிதை எனப்பெயரிடுகிறாயே???.

என் ஆசைகள் அனைத்தையும் சேர்த்து
சிறையில் அடைத்து வாழ்நாள் முழுக்க
உன்னை மட்டுமே பார்த்துச் சாகச்சொன்ன
நீதிபதி
உன் கண்கள் தான்....

காற்றின் சலசலப்பில்
நெடுநாட்களாய்
பறவையாய் பறக்க நினைத்து
மரத்தை திட்டித்தீர்த்த இலை ஒன்று.,
கடைசியில்
விடுபட்டு, பறந்து, உதிர்ந்து
சருகாய்க்கிடந்தவுடன்
காற்றைச்சபிக்கின்றது
என் நினைவுகளைப்போல்....

இணைபிரிந்த தரிசுநிலத்தின்
வெடிப்புற்றுக்கிடக்கும்
இரு உதடுகளுக்கு நடுவே
கூச்சமே இல்லாமல்
முத்தமிட்டுச்செல்கின்றது மழை....
காத்துக்கிடந்த நம் காதலுக்கு நடுவே
நீ கல்யாண அழைப்பிதழை
நீட்டியதுப்போல்..

உன் பார்வைகளின்
மகுடிக்கு தலையசைக்கும்
காதுகேளாத என் இதயத்திற்கு
கல்யாண ராகமும் ஒன்று தான்
முகாரி ராகமும் ஒன்று தான்....

மேகம் வானத்தின் அழுக்கென்றால்
என் ஞாபகங்களை என்னவென்பாய்?

கொன்றால் பாவம்
தின்றால் தீருமாமே...!!
காதலை அறுத்துக்கொன்றுவிட்டு
காதலையே திங்கப்போகின்றாயா??