Pages

Wednesday, March 23, 2011

பாவம் அவள்!!

சரியாய் தூங்கியிராத
அவ்விரவின் காலையில்
அவசரக்கிளம்புதலில்
சாமான்யமாய் எதிர்ப்பட்ட
அவளின் மேடு பள்ளங்களில் உயிர்ப்பெற்று
முக்குச்சந்து போஸ்டரின் கதாநாயகியிடம்
இரவல் உருவம் பெற்று ,
மாலை வரை விஸ்வரூபமடைந்து
மூச்சிரைத்து, பின்
காய்கறிக்கடைக்காரியின் இடுப்புமடிப்பில் இளைப்பாறி
வீடடைந்து, விளக்கணைத்து
ஒழுகித்தீர்ந்தவுடன்.,,
அவளை "ச்சீய்" என்று சபிக்கின்றது
காமம்........

1 comments:

Anonymous said...

இயல்பான ஆனால் ஆழமான கவிதை.. சாட்டையடி .. !