Pages

Tuesday, September 14, 2010

பேருந்துபயணம் !!


நம் பார்வைகளுக்கிடையேயான பாலத்தில்
நாசூக்காய் பயணம் செய்கின்றது
காதல்.

உன் விழிகள் எழுதும்
அத்தனை இலக்கியங்களுக்கும்
எங்கு போய் பொருள் தேட ???

நான் என்னை மறக்கும்போது உன்னை நினைக்கவும்
நீ உன்னை மறக்கும் பொது என்னை நினைக்கவும்
நாம் நம்மை மறக்கும்போது
தம்மை நினைத்துக்கொண்டன "நம் நினைவுகள்".

உன் நெற்றியில் தவழ்ந்திருக்கும் இரண்டொரு முடி
எப்போதும் புதுக்கவிதை வரைந்துக்கொண்டிருக்கின்றது

மறந்து இமைக்கையில்
நீ புன்னகைப்பதாய் தெரிந்தஅந்த கண நொடியில்
கோடி செல்கள் இனப்பெருக்கம் அடைகின்றன என்னுள்....

விற்பனைக்குப்போய் திரும்பிய
பூக்கூடையின் எஞ்சிய மலர்களில்
கனமாய் அமர்ந்திருக்கின்றது
எனக்கானதான ஏமாற்றம்..

கசாப்புக்கடைக்காரன் விரல்களுக்கிடையே
லாவகமாய் நுழைந்து தப்பும்
தடித்த கத்தியாய்
தவிப்புகள்...

உன் முனைவின் எல்லா முடிவிலும் கால் முறித்துக்கொண்டன
வார்த்தைகள்..

பேருந்து நிறுத்தம் வரைக்கும்
சளைக்காமல் கூடவே வந்து தொலைந்தது
நம் அசட்டு தைரியம்.

ஏதாவதொரு திடீர் "பிரேக்"கிடலில்
அவசரமாய் வெளிப்படலாம் எனது பெயர்
அது போதும்.
உன் ஒட்டு மொத்த காதலையும் சொல்ல!!

2 comments:

Tharani said...

Nice one

தமிழ்த்தோட்டம் said...

அருமையா இருக்கு வாழ்த்துக்கள்