Pages

Wednesday, February 2, 2011

மரணம்.....

பிரித்தெரியப்பட்ட
பொட்டலக்காகிதமாய்
இன்று- தெ௫வோரம்...

அந்த முகட்டில்
ஒரேபுறமாய் நீண்டநேரம்
படுத்தி௫க்க முடியவில்லை என்றாலும்
திராணியற்றுப் போயிருக்கின்றது
திரும்பிப் படுக்கவும்.,
தேம்பி அழவும்....

பிய்த்துத் தின்னும் தினவுகளுக்கு
மனம் என்றொன்றிருப்பதில்லை
மகனைப்போலவே!!

வாலிபங்கள் வேடிக்கைப்பார்க்கும் தெருவில்
வயோதிகம் மாறுவேடப்போட்டி நடத்துகின்றது

எந்த நிறமானாலும்
சுற்றியிருக்கும் மரப்பூச்சி ஒன்றுதான்
என்பதை கலர்பென்சில்கள் அறிவதில்லை..

யாரோ இரக்கப்பட்டு வைத்துப்போன
தேநீர்க்கோப்பைமேல் ஒன்று௬டி
"வாய்த்தல்" என்ற தலைப்பில்
பட்டிமன்றம் நடத்தி
வாய்க்கு வந்தபடிபேசித்தீர்க்கின்றன ஈக்கள்...

திறக்கப்படாத கதவிற்கு
எத்தனை சாவிகளிருந்து என்ன??

தி௫த்தி முடித்த வாழ்க்கைக்கு
மதிப்பெண் ஒட்டிச்செல்கின்றது
மரணம்.....

தேடியெடுத்து உ௫ட்டி
உதட்டில் ஒட்டவைத்துக்கொள்கிறேன்
சிறு புன்னகையை...
பாவம் ,
"சிரிச்சினே செத்துப்போயிருக்கான்யா"
என்று யாராவது சொல்லிப்போவார்கள்...







2 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

மிகவும் நன்றாக இருக்கிறது.

Unknown said...

arumaiyaana kathai.
kovam kollaamal irundaal ondru solven.
mudivu kongjam athikappadiyaay ullathu.avargal piriyathan vendum endral veru ethanaiyoo vali irukkirathee. ithu een endru puriyavilai.ungal eluthil oru eerppu irikkirathu. padippavargalai kaddi iluthu kodave kondu sellum oru alagu irukkirathu. ellathukkum mela oru iyalbu irukku .
i like it .
உனக்குள் நான் இல்லை என்று நீ நடிப்பது
முழுவதுமாய் உனக்குள் ஒளிந்து கொள்ள
வசதியாய் இருக்கின்றது..

nalla sindanai. nalla unmaiyum kooda.