Pages

Monday, December 22, 2008

உன்னைப் போல்!!

எல்லோ௫ம்
வாழ்க்கையில் வாழ்கிறார்கள்...
நான்மட்டும் உன் வார்த்தையில் வாழ்கிறேன்..

குறுகியபாதையில்
சிராய்ப்புடன் இழுக்கும்
பூட்டியமாடுகளாய்
நானும் காதலும்..

கிரீச்சிடும் கதவுகள்
சொல்லியுமா புரியவில்லை
திறக்கப்படாதி௫த்தலின் துயரத்தை...???

காதலுக்கு கண் இல்லை-சரி
உன் கண்ணில் ஏன் காதலே இல்லை..

உன் அழகின்
சிலந்தி௬ட்டிற்க்கு இரை-தினம் என் கனவுகள்...

எறும்புகள் இழுத்துச் செல்லும்
சிறகொடிந்த ஈசலாய்
உன் நினைவுகளிடம் என் இதயம்...

முடிக்கத் தெரியாமலே
முடிவடைகிறது இந்தக்கவிதை..
தொடங்கத்தெரியாத உன்னைப்போல்....


6 comments:

கோகுலன் said...

//கிரீச்சிடும் கதவுகள்
சொல்லியுமா புரியவில்லை
திறக்கப்படாதி௫த்தலின் துயரத்தை...//

நன்று..

//எறும்புகள் இழுத்துச் செல்லும்
சிறகொடிந்த ஈசலாய்
உன் நினைவுகளிடம் என் இதயம்...

முடிக்கத் தெரியாமலே
முடிவடைகிறது இந்தக்கவிதை..
தொடங்கத்தெரியாத உன்னைப்போல்....//

மிக ரசித்தேன் இவ்வரிகளை..

Gowripriya said...

//எறும்புகள் இழுத்துச் செல்லும்
சிறகொடிந்த ஈசலாய்
உன் நினைவுகளிடம் என் இதயம்...

முடிக்கத் தெரியாமலே
முடிவடைகிறது இந்தக்கவிதை..
தொடங்கத்தெரியாத உன்னைப்போல்....//

அருமை.. அருமை...

மயாதி said...

எல்லோ௫ம்
வாழ்க்கையில் வாழ்கிறார்கள்...
நான்மட்டும் உன் வார்த்தையில் வாழ்கிறேன்..
//
நிஜமாகவே ரசித்தேன்

Unknown said...

I am your big fan bupesh!!!Neenga innum niraya kavithai post pannanum..

PIRAI said...

nice poem....i enjoyed..nanru

Sekara said...

காதலுக்கு கண் இல்லை-சரி
உன் கண்ணில் ஏன் காதலே இல்லை..

excellent lines...