Pages

Friday, May 23, 2008

சமாதானம் சொல்ல...


தயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா...
உன்னையே சுற்றும் என்னிதயம்
கீறல்பட்டு கதறுகிறது..

நடைபாதையில் வீடுகட்டும்
அறிவில்லா- ¨எறும்புகள்¨
உன் - நினைவுகள்......

விதவை கடக்கும்- பூக்கடைகளாய்
கண்டபடி கை கொட்டி சிரிக்கின்றன
உன்னை பற்றிய -ஏக்கங்கள்.....

என் சுவாசம்
உன் அலட்சியத்தின் வாசலில்
முட்கிரீடத்துடன் அறையப்பட்டி௫க்கிறது....

விரலையே.... ஒடித்துக்கொள்ளும் அளவுக்கு.,
அப்படி என்னதான்..... தீர்ப்பெழுதினாய்...?
குற்றவாளிக்௬ண்டில் நிற்கும்
¨என் காதலுக்கு¨....?
எரித்துவிட்டுப்போ....
காதல் கடிதங்களோடு சேர்த்து...காதலையும்.,!
சாம்பலாவது விட்டுச்செல்..
சாட்சி சொல்ல அல்ல....
எனக்கு சமாதானம் சொல்ல...

2 comments:

MSK / Saravana said...

//விரலையே.... ஒடித்துக்கொள்ளும் அளவுக்கு.,
அப்படி என்னதான்..... தீர்ப்பெழுதினாய்...?
குற்றவாளிக்௬ண்டில் நிற்கும்
¨என் காதலுக்கு¨....?//

நல்ல வரிகள் .. :)

cheena (சீனா) said...

காதல் தோல்வி - அப்பட்டமாக அறையும் கவிதை.

இதயம் கீறப்படுவதும், அறிவில்லா எறும்புகளும், விதவை கடக்கும் பூக்கடைகளும், விரலையே ஒடிக்கும் டீர்ப்பும், எரிக்கப்பட்ட கடிதங்களும், சமாதானம் சொல்லும் சாம்பல்களும் .....


அருமையான - மாறுபட்ட சிந்தனைகள். கற்பனை கொடி கட்டிப் பறக்கும் கவிதை.

நன்று நன்று நல்வாழ்த்துகள்