Pages

Friday, May 9, 2008

ஏசுவல்ல நான்......


நடத்துனர் கிழித்த
பயணச்சீட்டுபோல
தாறுமாறாய் கிழித்துவிட்டாய்
என் வாழ்வை.....

உன் மெளனம் சொன்ன விலைக்கு
வாங்கமுடியவில்லை
உன் இதயத்தை.....

விளக்காக நானும்,
ஒளியாக நீயும் ஒளிர்வதாக நினைத்தேன்
திரியாக நான் தீர்ந்து வ௫வதை
இப்போதுதான் உணர்கிறேன்....
உனக்காய்..
பொறுத்தல் - ¨இறப்பினை¨தான்.

காதல்¨- நீதிமன்றத்தில் சந்திப்போம்
இ௫ மரணங்களாக......

நீ அனுப்பிய
வாழ்த்து மடல்கள் ப௫கி
உயிர் வாழ்கின்றன...
என் கடைசி நிமிடங்கள்...

இரக்கமற்றவளே
இறக்குமுன் சீக்கிரம் வந்து பார்
உயிர்த்தெழ ஏசுவல்ல நான்......

2 comments:

MSK / Saravana said...

//உன் மெளனம் சொன்ன விலைக்கு
வாங்கமுடியவில்லை
உன் இதயத்தை.....//

//இரக்கமற்றவளே
இறக்குமுன் சீக்கிரம் வந்து பார்
உயிர்த்தெழ ஏசுவல்ல நான்.....//

இந்த கவிதை நல்லா இருக்கு..

cheena (சீனா) said...

நடத்துனர் கிழிக்கும் - தாறுமாறாக கிழிக்கும் சீட்டு, வாங்க (பெற) முடியாத இதயம், தீர்ந்து போகும் திரி,
ஏசுவல்ல எப் பறை சாற்றுதல்ல்

கவிஞனின் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

நல்வாழ்த்துகள்