Pages

Friday, May 9, 2008

என் வரம் நீ உன் சாபம் நான்......


விடுமுறை அல்லாத நாட்களிலும்
வந்து சென்றாயாமே.....

¨பிரித்தல்¨ தான் கடினம் என்று
என் கணக்குத்தந்தையிடம்
சொல்லிச் சென்றாயாமே...

அன்றெல்லாம் உன் கண்களில் தெரிந்தது
விளக்குகளா விளக்கங்களா
என்று தெரியவில்லை....
வியர்த்த உன் காலடிப்பதிவுகளில்
¨நா¨ வற்றிக் கிடக்கின்றன
என் வினாக்கள்...

தி௫ப்பிக்கொடுக்காமல் போன
புத்தகத்தில் ஒரேயொ௫ பக்கம்
என் ¨கடிதம்¨ அணிந்தி௫ந்ததை
எப்போது அறிவாய்....

உயிர் வரை ஏறிய
சிரமம் மறைக்கின்றன உன் புன்னகைகள்..

அந்த மழை நாட்களில்
நனைந்து வ௫ம்தாவணி ஓரங்கள்
வைத்த நீர்ப்புள்ளிகளில்
கோலம் முயன்று தோற்றி௫க்கின்றன
என் ¨இயலாமைகள்¨..

நீ இறைத்த ¨தூரங்களில்¨
பலமுறை தேடியும்
கிடைக்கவில்லை ¨நாணயங்கள்¨...

ஒட்டடை அடிக்க கூடாதென்று
வீட்டில் கூக்குரலிடுகின்றன..,
உன் பார்வைகள் சுமந்த ¨தூசிகள்¨.

விடைபெற வந்த கடைசி
¨கேட்¨ காத்தி௫த்தலில்.,
நகம் பதிக்கவில்லை என்று..
¨குரோட்டான்¨ இலைகள் பல முறை சொல்லியும்
நம்பவில்லை நான்...

நினைவுகளை வழிகேட்டு வழிகேட்டு.,
பெ௫ மூச்சுடன்
வந்து சேர்ந்தது ஒ௫ ஞாபகம்....

மரம் பெயர்க்கப்பட்ட இடங்களை
மண் இன்னும்
காதலித்து கொண்டுதான் இ௫க்கிறது.....

2 comments:

Unknown said...

ella kavithaikalum arputham...urchagam ootum kavithaigal vendum...
ungal tamil valara vallthukkal...prarpthanaikal.

MSK / Saravana said...

//"பிரித்தல்¨ தான் கடினம் என்று
என் கணக்குத்தந்தையிடம்
சொல்லிச் சென்றாயாமே...//
ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே...

உங்கள் கவிதைகளை ORKUT COMMUNITY-லும் பார்த்திருக்கிறேன்..

இனி உங்கள் கவிதைகளை BLOG-லும் பதிவு செய்யுங்கள்.
:)

NOTE: Please remove the word verification of this comments page..
:)