Pages

Friday, June 26, 2009

என் இதயம்...



தி௫ப்தி இன்றி முடித்தகவிதை ஒன்றைஎடுத்துக்கொண்டு
எதிர்ப்பார்ப்புகளின் வரிசையில்
காத்துக்கிடக்கின்றது என்ஆசை...


வாழ்ந்து பழகிவிட்ட அறையிலி௫ந்து
கிளம்ப மறுக்கின்றன
உன்னுடையதான நினைவுகள்....

தெ௫வில் கிடக்கும் அனாதை நாய்க்குட்டியின்
முனகல்களைகண்டு.,
எடுத்துவரவும் இயலாமல்,
விட்டுவிலகவும் முடியாமல்
தயங்கி நிற்பதாய்..,
காதலுடன் என் வாலிபம்...

உன்னையும் என்னையும்
அமரவைத்துவிட்டு
சிலுவை சுமந்தபடி கனவுகள்...

எல்லாம் நம்பிக்கைதான்.....
பகலிலும் தோன்றும் நிலவாய்,
என்றாவது புலப்படும்..
உன் விழியிலும் என் இதயம்...

4 comments:

மயாதி said...

டெம்பிளேட் கலரைக் கொஞ்சம் கவனிக்கலாமே நணபரே

மயாதி said...

இன்னும் நிறைய எழுதுங்கள் ...
வாழ்த்துக்கள்

nila said...

//எல்லாம் நம்பிக்கைதான்.....
பகலிலும் தோன்றும் நிலவாய்,
என்றாவது புலப்படும்..
உன் விழியிலும் என் இதயம்...//
இப்படிப்பட்ட நம்பிக்கைகள் தான் இன்னும் பூமியை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன

Bee'morgan said...

பூபேஷ்,
உங்களுக்கு என்னால் ஆன சிறிய பரிசு..
http://beemorgan.blogspot.com/2009/07/blog-post.html

நீங்களும் தொடர்ந்தால் பெரிதும் மகிழ்வேன்.. :)