
என் பிராத்தனைகளில்
நீ கடவுளாகிறாய்....
நிறைவேறா வேண்டுதல்களுடன்
ஏமாற்றமாய் ஆசை...
உன் நிழலையும்
இருள் என்கிறாய் நீ...
இருளையும் நிழலென்கிறேன் நான்...
குருடனாய்- பேந்த பேந்த விழிக்கின்றது
வாழ்க்கை...
உனக்கு நினைவிருக்கின்றதா என்று
தெரியவில்லை
உன் கழுத்துச் சங்கிலியின்
இறுக்கத்தைவிட என் அருகாமையைதான்
அதிகம் நேசிக்கிறேன் என்று நீ
கவிதை சொன்னதை....
வேறோருவனுடனான
உன் நிர்பந்தச் சம்மதத்திர்க்குப்பின்
என் தயக்கமும்
உன் மௌனமும்
கட்டிப்பிடித்தபடி தலைக்கீழாய் முட்டி
தற்கொலை செய்துக்கொண்டன......
உடன்கட்டை ஏறும் நோக்குடன்
காத்துக்கிடக்கின்றது காதல்....
பாதியாய் எரிந்து அணைந்த
கொடுக்கமுடியாக் காதல் கடிதங்கள்
உன் வீட்டின் முல்வேளிக்காம்புகளின்
இடுக்கில் மாட்டிக்கொண்டு
இரத்தம் கக்கியபடியே
என் கனவுகளைப்பற்றி
கதை சொல்லிப்போகின்றது....
2 comments:
ungal padaippugalil idhu top class....simply superb!
very touching
Post a Comment