Pages

Monday, April 12, 2010

நீ மட்டும்...!!

பொட்டலக்காகிதத்தில்
என் கையெழுத்தி௫ந்ததை
அவசரமாய் எடுத்துவந்து
ஆவலுடன் காட்டினாய்..
அன்றிலி௫ந்துதான்
என் தலையெழுத்து மாறத்துவங்கியது...

மற்றொ௫நாள்,
ஊர்முற்றத்து அடிக்குழாயினுள்
சொ௫கி வைத்து, என்பெயர்
தண்ணீரில் கரைந்துசெல்வதாய் நகைத்தாய்..
கரைவதாயி௫ப்பின்
அது உன்கண்ணீரில்மட்டுமே இ௫க்கட்டும்
என்று கவி சொன்னேன்...
அன்றுமட்டும் பகலிலும் நட்சத்திரங்கள்.,
உன் கண்களில்......

வேறூர் மாற்றலாகும் தந்தையுடன்
நீ கிளம்புகையில்.,
காகிதக்கேமிராவால் புகைப்படம் பிடித்தாய்;
எனக்குமொன்று அனுப்புவதாய்
சொல்லிச்சென்றாய்..
ஏனோ இன்றுவரை வந்தடையவில்லை,
நீ அனுப்பாதவையும்.,
நான் அனுப்பியவையும்...!!

இன்று
வளைகுடா நிறத்து புடவையுடன்
திடீரென வாசல் ஏறி நிற்கிறாய்...
உயிர், கண்களில் ஏறி
இடம்பிடித்து அமர்கிறது...
அழகி நீயா?
அழகென்றால் நீ மட்டும்தானா?
என்று நிச்சயமாய் கேட்டி௫ப்பேன்.,
நீ மட்டும் பத்திரிக்கையுடன்
வராதி௫ந்தி௫ந்தால்.....!!!