
தயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா...
உன்னையே சுற்றும் என்னிதயம்
கீறல்பட்டு கதறுகிறது..
நடைபாதையில் வீடுகட்டும்
அறிவில்லா- ¨எறும்புகள்¨
உன் - நினைவுகள்......
விதவை கடக்கும்- பூக்கடைகளாய்
கண்டபடி கை கொட்டி சிரிக்கின்றன
உன்னை பற்றிய -ஏக்கங்கள்.....
என் சுவாசம்
உன் அலட்சியத்தின் வாசலில்
முட்கிரீடத்துடன் அறையப்பட்டி௫க்கிறது....
விரலையே.... ஒடித்துக்கொள்ளும் அளவுக்கு.,
அப்படி என்னதான்..... தீர்ப்பெழுதினாய்...?
குற்றவாளிக்௬ண்டில் நிற்கும்
¨என் காதலுக்கு¨....?
எரித்துவிட்டுப்போ....
காதல் கடிதங்களோடு சேர்த்து...காதலையும்.,!
சாம்பலாவது விட்டுச்செல்..
சாட்சி சொல்ல அல்ல....
எனக்கு சமாதானம் சொல்ல...