Pages

Sunday, February 6, 2011

எனக்குள் நீ...!!


இதயத்தின் சமதளப்பலகையில்
ஒரு முனையில் என் வாலிபம்
மறுமுனையில் உன் காதல்...
உன் காதல் அதிகரிக்க அதிகரிக்க
எகிறித் தத்தளிக்கின்றது வாலிபம்!!

உனக்குள் நான் இல்லை என்று நீ நடிப்பது
முழுவதுமாய் உனக்குள் ஒளிந்து கொள்ள
வசதியாய் இருக்கின்றது..

அத்தனைக்கும் ஆசைப்படு!!
அத்தனைக்கும் சேர்த்து
உன்மேல் ஆசைப்படுகிறேன்!!!!!

அப்பட்டமான பொய்யினை
நயமாய்ச் சொன்னால் அது கவிதை..
அப்பட்டமான அழகை நயமாய் வரைந்தால்
அத்தனையும் நீயாகிறாய்...

எதிர்பாராது கிடைக்கப்பெற்ற முத்தம்,
உன் காதலின் அடர்த்தி குறித்து
என் டைரி மொத்தத்திற்கும்
கவிதை எழுதி வைக்கின்றது...

எதை எழுதினாலும் கவிதை என்கிறாய்..
எனக்குத்தான் வாய்ப்பதில்லை
எழுதியவைகளை நானே ரசித்து திருப்திப்பட.....!!

0 comments: